Advertisement

நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு

By: vaithegi Mon, 06 Feb 2023 5:33:01 PM

நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு

புதுடெல்லி : இரு அவைகளும் நாளை காலை 11 மணிக்கு ஒத்திவைப்பு .... நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. அதை த்தொடர்ந்து பிப்.1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அதனைத்தொடர்ந்து 2 நாட்களும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், அதானி குழும நிறுவனங்கள் மீது அண்மையில் மோசடி குற்றச்சாட்டுகளை வெளியிட்டது.

இதையடுத்து போலி நிறுவனங்களை தொடங்கி, தனது பங்கு விலையை உயர்த்திக்காட்ட மோசடி செய்தது போன்ற அடுக்கடுக்கான புகார்கள் வெளியானது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் அதானி குழும பங்குகள் கடும் சரிவை சந்தித்து கொண்டு வருகின்றன. உலக பணக்காரர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் இருந்து 20 இடங்களுக்கு மேல் தள்ளப்பட்டிருக்கிறார் கௌதம் அதானி.

both houses,parliament , இரு அவை,நாடாளுமன்றம்


இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர். முன்னதாக நாடாளுமன்ற வாளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் , அவை தொடங்கியதும் அதானி குழும முறைகேடு குறித்து கூட்டுக் குழு விசாரணை நடத்த வலியுறுத்தினர். மக்களவை , மாநிலங்களவை என இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பின.

இதனை அடுத்து எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை இரு அவைகளின் தலைவர்களும் ஏற்க மறுத்ததை தொடர்ந்து, எம்.பிக்களின் தொடர் முழக்கத்தால் பகல் 2 மணிவரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இருஅவைகளும் 2 மணிக்கு மேல் கூடியது. அப்போது அதானி குழும முறைகேடு விவகாரம்-நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தினர். எதிர்க்கட்சியின் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை காலை 11 மணிக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அவர்கள் தெரிவித்துள்ளார்

Tags :