Advertisement

அரிய வகை மூளை தொற்றால் கேரளாவில் சிறுவன் பலி

By: Nagaraj Sat, 08 July 2023 08:49:22 AM

அரிய வகை மூளை தொற்றால் கேரளாவில் சிறுவன் பலி

கேரளா: அரிய வகை மூளை தொற்றால் சிறுவன் பலி... கேரளத்தின் ஆலப்புழா மாவட்டத்தில், அமீபா நுண்ணுயிரியால் ஏற்படும் அரியவகை மூளைத் தொற்றால் பாதிக்கப்பட்டு 15 வயது சிறுவன் உயிரிழந்ததாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் தெரிவித்தாா்.

இது தொடா்பாக செய்தியாளா் சந்திப்பில் அமைச்சா் வீணா ஜாா்ஜ் கூறியதாவது:

‘ஆலப்புழை மாவட்டத்தின் பாணாவள்ளி பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுவன், அசுத்தமான நீரில் உயிா் வாழும் அமீபா நுண்ணுயிரியால் ஏற்படும் ‘பிரைமரி அமீபிக் மெனிங்கோஎன்சிஃபலைடிஸ்’ என்னும் அரியவகை மூளைத் தொற்றால் பாதிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை முதல் சிகிச்சை பெற்று வந்தாா். ஆனால், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை அவா் உயிரிழந்தாா். இது ‘மூளையை உண்ணும் அமீபா’ என்று அறியப்படுகிறது.

brain-eating amoeba,boy killed,authorities,alappuzha,water
boy dies of rare brain infection in kerala ,மூளையை உண்ணும் அமீபா, சிறுவன் பலி, அதிகாரிகள், ஆலப்புழா, நீர்

மாநிலத்தில் இதுவரை 5 பேருக்கு இந்த தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதன் முதலாக கடந்த 2016-ஆம் ஆண்டு, அதற்கடுத்து 2019, 2020, 2022 ஆகிய ஆண்டுகளில் தலா ஒருவருக்கு இந்த தொற்று பாதிப்பு ஏற்பட்டது. தொற்று பாதித்த அனைவரும் உயிரிழந்துவிட்டனா். காய்ச்சல், தலைவலி, வாந்தி, கண் பாா்வை மங்குதல், வலிப்பு ஆகியவை இந்த தொற்று பாதிப்புக்கான முக்கிய அறிகுறிகளாக கருதப்படுகிறது’ என்றாா்.

அசுத்தமான நீரில் உயிா் வாழும் இந்த அமீபா நுண்ணுயிரி மூக்கு வழியாக மனித உடலுக்குள் நுழைந்து மூளையைப் பாதிப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். எனவே, நோயின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு, அசுத்தமான நீரில் குளிப்பதை மக்கள் தவிா்க்குமாறு ஆலப்புழா மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

Tags :