வருகிற ஆகஸ்ட் 25ம் தேதி அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம்
By: vaithegi Wed, 16 Aug 2023 11:27:07 AM
சென்னை: வருகிற ஆகஸ்ட் 25-ஆம் தேதி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் விரிவுபடுத்தப்படவுள்ளது. எனவே இதன் மூலம, வரலாற்றுச் சிறப்புமிக்க “காலை உணவுத் திட்டத்தால்” மாணவர்களின் வருகை உயர்ந்து, அவர்கள் தடையின்றி கல்வி பெறுதல் உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், வரும் கல்வியாண்டு முதல் 31,008 அரசு பள்ளிகளில் பயிலும் 15,75,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ வருகிற ஆகஸ்ட் 25 முதல் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து அதன்படி, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் படித்த திருக்குவளை அரசு பள்ளியில் இந்த காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். அதாவது, அந்த நாளில் அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும் அதற்கு, தேவையான அனைத்து ஏற்பாடுகளை அனைத்து பள்ளிகளிலும் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே, இந்த காலை உணவுத் திட்டம் கடந்த 2022ல் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி மறைந்த முதலமைச்சர் அண்ணா பிறந்தநாள் அன்று, 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தொடங்கப்பட்டது.