பிரித்தானியாவின் பேரிடர் அவசரக் குழு வேண்டுகோள்
By: Nagaraj Thu, 09 Feb 2023 10:14:09 PM
துருக்கி: மக்களுக்கு உதவ வேண்டுகோள்... துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட நூறாயிரக்கணக்கான மக்களுக்கு உதவ பிரித்தானியாவின் பேரிடர் அவசரக் குழு மூலம் ஒரு வேண்டுகோள் தொடங்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய செஞ்சிலுவைச் சங்கம், ஆக்ஸ்பாம் மற்றும் ஆக்ஷன் எய்ட் உள்ளிட்ட பிரித்தானிய உதவி முகவர் நிறுவனங்கள் ஒன்றிணைந்து பணம் திரட்டுகின்றன.
சீனாவின் Hikvision, Dahua, நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறி கடந்த நவம்பர் மாதம் அமெரிக்கா தடை செய்தது.
சீனாவின் ஸின்ஜியாங் பிராந்தியத்திலுள்ள உய்குர் மக்களை உளவு பார்ப்பதற்கு இக்கெமராக்கள் பயன்படுத்தப்பட்டதாக செய்திகள் வெளியானதையடுத்து, இக்கேமராக்களை தடை செய்ய வேண்டும் என பிரித்தானிய எம்பிகள் பலர் பிரிட்டன் அரசை வலியுறுத்தியிருந்தனர்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ரிச்சர்ட் மார்லெஸ் கூறுகையில், "சீன நிறுவனங்களின் கேமிராக்களை ஆஸ்திரேலிய அரசு தனது அரசாங்க கட்டிடங்கள் உட்பட பல முக்கியமான இடங்களில் பொறுத்தியுள்ளது. ஆனால் இந்நிறுவனங்களை சீன அரசு மிரட்டி கேமிராக்களில் பதிவான சில முக்கியமான தகவல்களை கேட்டு பெறாது என்பதற்கு என்ன நிச்சயம் இருக்கிறது? எனவ இந்த சந்தேகம் காரணமாக நாங்கள் சீன நிறுவனங்களின் கேமிராக்களை அகற்ற இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.