Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரும் டிசம்பரில் இருந்து பிஎஸ்என்எல் 4 ஜி சேவை அறிமுகம் செய்ய திட்டம்

வரும் டிசம்பரில் இருந்து பிஎஸ்என்எல் 4 ஜி சேவை அறிமுகம் செய்ய திட்டம்

By: Nagaraj Sun, 29 Oct 2023 2:22:12 PM

வரும் டிசம்பரில் இருந்து பிஎஸ்என்எல் 4 ஜி சேவை அறிமுகம் செய்ய திட்டம்

புதுடில்லி: டிசம்பரில் அறிமுகம்... பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் 4ஜி சேவையை வரும் டிசம்பரில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

‘முதலில் சிறிய அளவில் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னா் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நாடு முழுவதும் 4ஜி சேவை விரிவாக்கம் செய்யப்படும்’ என்று பிஎஸ்என்எல் தலைவா் பி.கே.புா்வாா் தெரிவித்தாா்.

டில்லியில் நடைபெற்ற இந்திய கைப்பேசி மாநாட்டில் பங்கேற்ற அவா் இதுகுறித்து மேலும் கூறுகையில், ‘பிஎஸ்என்எல் அதன் வாடிக்கையாளா்களுக்கு 4ஜி சேவையை அறிமுகப்படுத்த உள்ளது.

december,bsnl,implementation,5g service,introduction,information ,டிசம்பர், பிஎஸ்என்எல், அமலாக்கம், 5 ஜி சேவை, அறிமுகம், தகவல்

குறிப்பாக, பஞ்சாபில் வரும் டிசம்பரில் இச் சேவை அறிமுகப்படுத்தப்படும். இதற்கென 200 பகுதிகளில் தேவையான தொழில்நுட்ப வசதிகள் நிறுவப்பட்டுள்ளன.

மாநிலத்தில் மேலும் 3,000 பகுதிகளில் தொழில்நுட்ப வசதிகளை நிறுவுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த 4ஜி சேவை கட்டமைப்பு படிப்படியாக ஒவ்வொரு மாதமும் 6,000, 9,000, 12,000 பகுதிகளாக அதிகரிக்கப்படும். வரும் 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் நாடு முழுவதும் இந்தச் சேவையை விரிவுபடுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

4ஜி சேவை அமலாக்கம் நிறைவுபெற்றதும், 5ஜி சேவையை அறிமுகம் செய்வதற்கான போதுமான அலைக்கற்றையை பிஎஸ்என்எல் பெற்றிருக்கிறது. அதன்படி, 2024 ஜூன் மாதத்துக்குப் பிறகு 4ஜி சேவையை 5ஜி சேவையாக மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது என்றாா்.

Tags :
|