Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சேலத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பஸ்கள் நிறுத்தம்

சேலத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பஸ்கள் நிறுத்தம்

By: Monisha Wed, 25 Nov 2020 3:00:43 PM

சேலத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பஸ்கள் நிறுத்தம்

நிவர் புயல் காரணமாக சேலத்தில் இருந்து சென்னைக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் 34 பஸ்கள் பணிமனைகளில் நிறுத்தம்

நிவர் புயலால் சேலத்தில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், நிவர் புயலால் சென்னைக்கு பஸ்களை இயக்க வேண்டாம் என அதிகாரிகள் கிளை மேலாளருக்கு உத்தரவிட்டுள்ளனர். இதனால் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் எஸ்.இ.டி.சி. பஸ்களில் 530-ம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.

salem,chennai,buses,nivar storm,government transport ,சேலம்,சென்னை,பஸ்கள்,நிவர் புயல்,அரசு போக்குவரத்து

இதில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு நகரங்களில் இருந்து சேலம் மார்க்கமாக இயக்கப்படும் 58 எஸ்.இ.டி.சி. பஸ்களும் அடங்கும். இது தவிர அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சேலம், கோவை, விழுப்புரம் கோட்டங்கள் சார்பில் இயக்கப்படும் 420 பஸ்கள் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதில் சேலத்தில் இருந்து சென்னைக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் 34 பஸ்கள், கடலூர் 20, பாண்டிச்சேரி 10, சிதம்பரத்திற்கு இயக்கப்படும் 8 பஸ்களும் அடங்கும். மேலும் புயல் கரையை கடந்த பின்னர் அதிகாரிகள் உத்தரவு படி அடுத்த கட்டமாக பஸ்கள் இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
|
|