- வீடு›
- செய்திகள்›
- தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் தாம்பரம் வழியாக பேருந்துகளை இயக்க உத்தரவு
தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் தாம்பரம் வழியாக பேருந்துகளை இயக்க உத்தரவு
By: vaithegi Fri, 17 Feb 2023 3:14:08 PM
சென்னை: தாம்பரம் வழியாக இயக்க அனுமதி .... தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் தற்போது பெருங்களத்தூர் மதுரவாயல் சுங்கச்சாவடி வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் தாம்பரம் வழியாக பேருந்துகளை இயக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெளியூர்களிலிருந்து குறிப்பாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் பேருந்துகள் பயணிகளின் வசதிக்காக அனைத்து பேருந்துகளையும் தாம்பரம் வழியாக இயக்க போக்குவரத்து கழகம் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்திவுள்ளது.
ஆனால் அதே நேரத்தில் மாலை 5 மணிக்கு மேல் சென்னை வரும் பேருந்துகளை வழக்கம் போன்று பெருங்களத்தூர் மதுரவாயல் சுங்கச்சாவடி வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த உத்தரவின் காரணமாக பகல் நேரத்தில் சென்னை வரும் பேருந்துகள் மட்டும் தாம்பரம் வழியாக செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது