கோவாவில் கொரோனாவால் பாதித்து முதல் பலி
By: Nagaraj Mon, 22 June 2020 9:24:39 PM
கோவாவில் கொரோனா பாதித்து முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
85 வயதான ஒருவர் கோவாவில் முதல் கொரோனா தொற்றுக்கு பலியானார். சில மணி நேரங்களுக்குப் பின் முதல்வர் பிரமோத் சாவந்த் உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாது. இறுதி சடங்குகள் அரசாங்க அதிகாரிகளால் செய்யப்படும் என்றும் கூறினார்.
மார்கோவின் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் உயிரிழந்த நபர் சத்தாரி தாலுகாவின்
மோர்லெம் கிராமத்தில் வசித்தவர் ஆவார். இவருக்கு ஏற்கனவே ஆஸ்துமா, நீரிழிவு
நோய், நாள்பட்ட நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த நான்கு ஆண்டுகளாக
படுக்கையில் இருந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல்
குடும்பத்திடம் ஒப்படைக்கப்படாது. சில நெறிமுறையின்படி, மாநில சுகாதாரத்
துறை இறுதி சடங்குகளை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவாவில் கொரோனா
பாதித்து பலியான முதல்நபர் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.