Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மருத்துவத்துறை ஏற்படுத்திய குழப்பத்தால் திருப்பதி மக்கள் மத்தியில் பரபரப்பு

மருத்துவத்துறை ஏற்படுத்திய குழப்பத்தால் திருப்பதி மக்கள் மத்தியில் பரபரப்பு

By: Nagaraj Fri, 10 July 2020 12:32:18 PM

மருத்துவத்துறை ஏற்படுத்திய குழப்பத்தால் திருப்பதி மக்கள் மத்தியில் பரபரப்பு

திருமலை தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என சித்தூர் மாவட்ட மருத்துவ துறை நேற்று மதியம் அறிக்கை வெளியிட்டது. ஆனால் ஒரு மணி நேரத்தில் அறிக்கையில் இருந்த திருமலை பெயரை நீக்கி மீண்டும் அதே அறிக்கையை மருத்துவ துறை வெளியிட்டதால் குழப்பமும், பரபரப்பும் ஏற்பட்டது.

திருப்பதியில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க சுமார் 82 நாட்கள் வரை ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு தரிசனம் ரத்துசெய்யப்பட்டது. மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 11-ம் தேதி முதல் ஏழுமலையானை பக்தர்கள் சில நிபந்தனைகளின் அடிப்படையில் தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 10 நாட்களாக திருப்பதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மொத்தம் உள்ள 50 மாநகராட்சி வார்டுகளில் 43 வார்டுகளில் தொற்று உள்ளது. திருப்பதியில் மட்டும் 800-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே 500-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டது.

controversy,one hour,report,isolation,tirumalai ,சர்ச்சை, ஒரே மணி நேரம், அறிக்கை, தனிமைப்படுத்தப்பட்ட, திருமலை

திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதால், இம்மாதம் 30-ம் தேதி வரை பக்தர்களுக்கு கூடுதல் தரிசன டோக்கன்கள் வழங்கப்படாது என அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி அறிவித்துள்ளார். ஆனால் தற்போது தினமும் 12,500 பக்தர்கள் சுவாமியை தரிசித்து வருகின்றனர். 80-க்கும் மேற்பட்ட தேவஸ்தான ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதாக சித்தூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், திருமலை தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என சித்தூர் மாவட்ட மருத்துவ துறை நேற்று மதியம் அறிக்கை வெளியிட்டது. ஆனால் ஒரு மணி நேரத்தில் அறிக்கையில் இருந்த திருமலை பெயரை நீக்கி மீண்டும் அதே அறிக்கையை மருத்துவ துறை வெளியிட்டது. இதனால், தேவஸ்தான ஊழியர்கள் உட்பட பொதுமக்களும் குழப்பம் அடைந்தனர்.

இதுகுறித்து தேவஸ்தான உயர் அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
|