Advertisement

வேலைவாய்ப்புக்கு பள்ளிகளில் இனி பதிவு செய்ய முடியாத..

By: Monisha Sat, 09 July 2022 7:18:44 PM

வேலைவாய்ப்புக்கு பள்ளிகளில் இனி பதிவு செய்ய முடியாத..

தமிழ்நாடு: தமிழ்நாட்டில் 10, 12ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகள் தங்களது கல்வித் தகுதிகளை தாங்கள் படித்த பள்ளிகள் மூலம் நேரடியாக வேலைவாய்ப்புத் துறை இணையதளத்தில் பதிவு செய்யும் வசதி 2011ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது.

கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுசெய்து அனைத்து மாணவர்களுக்கும் ஒரே பதிவு மூப்பு எண் வழங்கப்பட்டு வந்தது.இந்நிலையில் நடப்பாண்டு 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி 3 வாரங்கள் கடந்துவிட்ட நிலையில் பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு செய்தல் குறித்து எவ்வித அறிவிப்பும் பள்ளிக்கல்வி ஆணையரகம் சார்பில் வெளியிடப்படவில்லை.
மற்றொருபுறம் இந்த ஆண்டு முதல் பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்யும் நடைமுறை கைவிடப்படுவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

school,students,employment,register ,வேலைவாய்ப்பு, பள்ளி,அலுவலகம், பதிவு,

வேலைவாய்ப்பு இணையதளத்தில் நேரடியாகவோ அல்லது இ சேவை மையங்கள் மூலமாகவோ மாணவர்கள் பதிவு செய்யலாம் என்று கூறப்படுகிறது. 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை அவரவர் படித்த பள்ளிகளிலேயே பதிவு செய்யும் நடைமுறை கைவிடப்படுகிறது.

மதிப்பெண் சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில்வந்து பதிவு செய்துகொள்ள வேண்டும்.மேலும், வேலைவாய்ப்பு இணையதளத்தில் (www.tnvelaivaaaippu.gov.in) நேரடியாகவோ அல்லது இசேவை மையங்கள் மூலமாகவோ மாணவர்கள் பதிவு செய்யலாம் என்று தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

Tags :
|