கனேடிய மாகாணங்கள் பனிப்புயலால் பாதிக்கப்படும்; சுற்றுச்சூழல் திணைக்களம் எச்சரிக்கை
By: Nagaraj Fri, 18 Dec 2020 09:36:04 AM
பனிப்புயலால் பாதிக்கப்படலாம்... இந்த வாரம் பல கனேடிய மாகாணங்கள் பனிப்புயலால் பாதிக்கப்படும் என கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது பிரிட்டிஷ் கொலம்பியாவின் சில பகுதிகளில் பனிப்பொழிவு எச்சரிக்கைகள் முதல் கியூபெக்கில் கடுமையான குளிர் மற்றும் நோவா க்ஷ்கோட்டியாவில் கடுமையான பனி வரை உள்ளது. குறிப்பிடத்தக்க பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படும் போது பனிப்பொழிவு எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன.
நோவா க்ஷ்கோட்டியாவின் சில பகுதிகள் டிசம்பர் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை
காலைக்குள் 25 சென்டிமீட்டர் பனிப்பொழிவைப் பெறும் என
எதிர்வுகூறப்பட்டுள்ளது. மாகாணத்தின் சில பகுதிகள் மணிக்கு 80 கிலோமீட்டர்
வேகத்தில் காற்று வீசும் என கூறப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ்
கொலம்பியாவின் ஒரு பகுதியும் பனிப்பொழிவு எச்சரிக்கையின் கீழ் உள்ளது.
இருப்பினும் அதிகபட்சம் 15 சென்டிமீட்டர் மட்டுமே பெறும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
கியூபெக்கின் தெற்குப் பகுதிகள் -40 சி வரை
குறைந்த குளிர்ச்சியை எதிர்நோக்கலாம். அதே நேரத்தில் வடக்கு பனிப்புயல்களை
எதிர்பார்க்கலாம். நுனாவுட் மற்றும் வடமேற்கு பிரதேசங்களும் கடுமையான
குளிரை அனுபவிக்கும்.