Advertisement

ஜிஎஸ்டி வரி விதிப்பு ரத்து .. அரிசி.. அரசுக்கு கோரிக்கை..

By: Monisha Tue, 12 July 2022 8:20:25 PM

ஜிஎஸ்டி வரி விதிப்பு ரத்து .. அரிசி.. அரசுக்கு கோரிக்கை..

தமிழ்நாடு: பண்டல் செய்யப்பட்ட அரிசி மற்றும் தானியங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது.இந்த 5% வரி விதிப்பை விலக்கிக் கொள்ள வேண்டும் என அரிசி ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி.சக்திவேல் பேசியபோது, “கடந்த ஜூன் 28, 29 தேதிகளில் பஞ்சாப் மாநிலம், சண்டிகர் நகரில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பண்டல் பேக்கிங் செய்யப்பட்ட அனைத்து விதமான அரிசி உள்ளிட்ட தானியங்கள் மற்றும் பொருள்களுக்கு 5 சதவீத வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரிஜிஸ்டர் பிராண்டுக்கு மட்டுமே 5 சதவீத வரி இருந்த சூழ்நிலையில், தற்போது பண்டல் செய்யப்பட்ட அனைத்து அரிசிக்கும் 5 சதவீத வரி அமல்படுத்தப்பட்டால், ஒரு கிலோவுக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை விலை உயரக் கூடும்.

cancellation,tax,goods,services , அரிசி,ஆலை,வரி ,விதிப்பு,

அதாவது, ரூ.1,000க்கு விற்கப்படும் 25 கிலோ கொண்ட அரிசிப் பை, இனிமேல் ரூ.1,050 ஆக விலை உயரக் கூடும். இந்தக் கூடுதல் விலை நடுத்தரக் குடும்பத்தை மட்டும் இல்லாமல், தினசரி வேலைக்குச் செல்லும் அடித்தட்டு மக்களையும் பெருமளவில் பாதிக்கக் கூடியது. எந்த அரசும் மக்கள் உபயோகிக்கும் அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு இதுவரை வரி அறிவிப்பு செய்ததில்லை.

எனவே, மக்களைப் பாதிக்கும் இந்த 5 சதவீத வரியை மத்திய அரசு உடனடியாக விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Tags :
|
|