Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முல்லை பெரியாறு அணை பராமரிப்பு தொடர்பான வழக்கு விசாரணை

முல்லை பெரியாறு அணை பராமரிப்பு தொடர்பான வழக்கு விசாரணை

By: Nagaraj Wed, 19 Apr 2023 12:43:20 PM

முல்லை பெரியாறு அணை பராமரிப்பு தொடர்பான வழக்கு விசாரணை

டெல்லி: கேரள அரசு தடையாக இருக்கிறது... முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ண மூர்த்தி, முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்க கேரள அரசு தடையாக இருப்பதாக வாதிட்டார்.

அணை பகுதிக்கு பெரிய உபகரணங்களை கொண்டு செல்ல அனுமதி மறுப்பதால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடியவில்லை என்றார். அணை பாதுகாப்பு தொடர்பாக கேரளாவை சேர்ந்த சிலர் தொடுத்துள்ள வழக்குகளையும் விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

dam,investigation,litigation,maintenance,mullai periyar,supreme court, ,அணை, உச்ச நீதிமன்றம், பராமரிப்பு, முல்லைப் பெரியாறு, வழக்கு, விசாரணை

இதையடுத்து அனைத்து அணைகளையும் பாதுகாக்க தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது. அணையின் பாதுகாப்பு அம்சங்களை கவனிக்கும் அதிகாரம் அமைப்புக்கு உள்ளது என்றும் வாதிடப்பட்டது.

இது தொடர்பாக மத்திய அரசு 2 வாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கை ஆகஸ்ட் மாதத்துக்கு ஒத்திவைத்தது.

அதன்பிறகு, தேசிய அணைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மாநில அணைப் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த அமைப்பில் 3 குழுக்கள் இருக்கும் என்றும் ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தலைவர் மற்றும் 3 உறுப்பினர்கள் இருப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|