கைதிகள் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு
By: Nagaraj Mon, 17 Apr 2023 10:15:17 PM
அம்பை: அம்பை சரக காவல்நிலையங்களில் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பல்வீர் சிங் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக பல்வீர் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. தொடர்ந்து விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் 506/1, 326, 324 ஆகிய 3 பிரிவுகளில் திருநெல்வேலி குற்றப்பிரிவு போலீசார் பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டு காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags :
police |