Advertisement

கரைபுரண்டு ஓடும் காவிரி ஆறு..

By: Monisha Wed, 13 July 2022 8:21:36 PM

கரைபுரண்டு ஓடும் காவிரி ஆறு..

தமிழ்நாடு: கர்நாடக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு வாரமாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.அதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளும் முழு கொள்ளளவை எட்டும் தறுவாயில் உள்ளது. இந்நிலையில், இரு அணைகளில் இருந்தும் அதிக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

1லட்சத்து 6 ஆயிரம் கன அடிநீர் வந்துகொண்டிருப்பதால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, மெயின் அருவி, சினி ஃபால்ஸ் உள்ளிட்ட அருவிகளை தண்ணீர் மூழ்கடித்தவாறு காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடுகிறது.

cauvery,river,overflowing,falls ,காவிரி ஆறு,கரை,புரண்டு,அருவி,

நீர்வரத்து அதிகரிப்பால் காவல்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்கள் ஒகேனக்கல் காவிரி ஆறு மற்றும் அருவிகளில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் குளிக்கவோ, பரிசல் சவாரி செய்யவோ, கால்நடைகளை ஆற்றில் அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தடை விதிக்கப்படும் என அறிவித்தார் .

இதனால் சுற்றுலா பயணிகளுக்கு முற்றிலும் தடை விதிப்பதாக விதிக்கப்பட்டது. மேலும் காவிரி கரையோர மக்களுக்கு வருவாய்த்துறையினர் தண்டுரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 1 லட்சம் கன அடியைக் கடந்து காவிரியாற்றில் ஆர்ப்பரிப்புடன் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது.

Tags :
|