சாத்தான்குளம் கொலை வழக்கில் விசாரணையை தொடங்கியது சிபிஐ
By: Nagaraj Sat, 11 July 2020 3:46:06 PM
விசாரணை தொடங்கினர் சிபிஐ அதிகாரிகள்... சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு தொடர்பான விசாரணையை ஏ.டி.எஸ்.பி. விஜய்குமார் சுக்லா தலைமையிலான 7 பேர் கொண்ட சி.பி.ஐ.அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது சாத்தான்குளம் இரட்டை கொலை. நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி தொடங்கியது.
தற்போது இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து இது தொடர்பான விசாரணையை தொடங்க ஏ.டி.எஸ்.பி. விஜய்குமார் சுக்லா தலைமையிலான 7 பேர் கொண்ட சி.பி.ஐ.அதிகாரிகள் தமிழகம் வந்தனர்.
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் வீட்டிற்குச் சென்ற அதிகாரிகள், அவர்களது
குடும்பத்தினர், உறவினரர்களிடம் விசாரணை நடத்தினர். சாத்தான்குளம் காவல்
நிலையம், கோவில்பட்டி கிளைச் சிறை உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று விசாரணை
நடத்த உள்ளனர்.
இதனிடையே இந்த வழக்கில், சாத்தான்குளம் காவல் நிலைய
சிசிடிவி காட்சிகள் மற்றும் ஹார்டு டிஸ்க் நீதிமன்றத்தில்
ஒப்படைக்கப்பட்டது. உயிரிழந்த தந்தை, மகனின் உடைகள், பிவிசி குழாய், லத்தி
உள்ளிட்டவை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.