சிபிஎஸ்இ தேர்வுகள் ஜூலை 1-ம் தேதி தொடங்குகிறது!
By: Monisha Mon, 18 May 2020 3:46:00 PM
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகளை ஜூலை மாதம் நடத்த மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி சிபிஎஸ்இ, 12-ம் வகுப்புக்கான தேர்வு அட்டவணையை இன்று வெளியிட்டுள்ளது
நாடு முழுவதும் உள்ள அனைத்து 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளும் ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறும். காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுத வரும் மாணவர்கள் சானிடைசர்கள் கொண்டு வர வேண்டும். மேலும் மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். முககவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும். தேர்வு அறைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.