Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படாததால் ..என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படாததால் ..என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு

By: vaithegi Tue, 19 July 2022 07:25:28 AM

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு  தேர்வு முடிவுகள் வெளியிடப்படாததால் ..என்ஜினீயரிங் படிப்புக்கு  விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு

சென்னை: 2022-23-ம் கல்வி ஆண்டுக்கான பி.இ., பி.டெக்., பி.ஆர்க். ஆகிய இளநிலை என்ஜினீயரிங் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு கடந்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாளாக 19-ந்தேதி (இன்று) ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாததை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு தேர்வு முடிவுகள் அறிவித்ததில் இருந்து 5 நாட்கள் வரை நீட்டிக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.

அதனால் அந்த அறிவிப்பின்படி தமிழ்நாடு என்ஜினியரிங் மாணவர் சேர்க்கை அலுவலகம் இதற்கான விண்ணப்பிக்கும் காலஅவகாசத்தை நீட்டித்து நேற்று உத்தரவிட்டது. நேற்று மாலை வரையிலான நிலவரப்படி 1 லட்சத்து 84 ஆயிரத்து 371 பேர் விண்ணப்ப பதிவு செய்து இருக்கின்றனர்.

engineering course,to apply,time limit ,என்ஜினீயரிங் படிப்பு,விண்ணப்பிக்க, காலஅவகாசம்

மேலும் இதில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 400 பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர் என்றும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 183 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து இருக்கின்றனர் என்றும் தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை தெரிவித்துள்ளது. அதேபோல் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதை தொடர்ந்து நேற்று வரை மட்டும் 3 லட்சத்து 89 ஆயிரத்து 969 பேர் விண்ணப்ப பதிவு செய்துள்ளனர். இவர்களில் 3 லட்சத்து 21 ஆயிரத்து 198 பேர் விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து இருப்பதாகவும், 2 லட்சத்து 86 ஆயிரத்து 564 பேர் கட்டணத்தை செலுத்தி உள்ளதாகவும் உயர்கல்வி துறை தெரிவித்து இருக்கிறது.

Tags :