Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஏப்ரல் 1ம் தேதிக்கு முன்னதாக புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகளை தொடங்கக் கூடாது ... சிபிஎஸ்இ எச்சரிக்கை

ஏப்ரல் 1ம் தேதிக்கு முன்னதாக புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகளை தொடங்கக் கூடாது ... சிபிஎஸ்இ எச்சரிக்கை

By: vaithegi Mon, 20 Mar 2023 10:12:16 AM

ஏப்ரல் 1ம் தேதிக்கு முன்னதாக புதிய கல்வியாண்டுக்கான  வகுப்புகளை தொடங்கக் கூடாது    ...  சிபிஎஸ்இ எச்சரிக்கை

சென்னை: பள்ளிகள் முன்கூட்டியே புதிய வகுப்புகளை தொடங்க கூடாது ... சி.பி.எஸ்.இ. செயலாளர் அனுராக் திரிபாதி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “சில பள்ளிகள் புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை ஏற்கனவே தொடங்கிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து குறிப்பிட்ட கால வரையறைக்குள்ளாக ஒட்டுமொத்த பாடங்களையும் நடத்திவிட வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளிகள் மேற்கொள்ளும் இத்தகைய நடவடிக்கைகள், அதிக சுமை மற்றும் மனச்சோா்வு ஆகிய பாதிப்புகளை மாணவா்கள் சந்திக்கும் நிலையை உருவாக்கும்.

cbse,schools ,சிபிஎஸ்இ ,பள்ளிகள்

மேலும் அதோடு, வாழ்க்கைத் திறன், நன்னெறி கல்வி, சுகாதாரம் மற்றும் உடற்கல்வி, பணித்திறன் மேம்பாட்டு கல்வி, சமூக சேவை போன்ற பாடம் சாராத நடவடிக்கைகளில் மாணவா்கள் ஈடுபட முடியாத நிலையும், அதற்கு போதிய அவகாசம் கிடைக்காத நிலையும் உருவாகும

இந்த பாடம் சாராத நடவடிக்கைகளும் கல்வித் திட்டத்தில் மிக முக்கியமானவையாகும். எனவே, வகுப்புகளை முன்கூட்டியே தொடங்குவதை பள்ளி முதல்வா்கள் தவிா்க்க வேண்டும். இதனால் வகுப்புகள் ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி மாா்ச் 31-ல் நிறைவு செய்யவேண்டும் என்ற நடைமுறையை அனைத்துப் பள்ளிகளும் கண்டிப்பாக பின்பற்றவேண்டும்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
|