Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நிவர் புயல் சேதங்களை கணக்கிட மத்திய குழு நாளை மறுநாள் வருகை

நிவர் புயல் சேதங்களை கணக்கிட மத்திய குழு நாளை மறுநாள் வருகை

By: Monisha Sat, 28 Nov 2020 5:25:23 PM

நிவர் புயல் சேதங்களை கணக்கிட மத்திய குழு நாளை மறுநாள் வருகை

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் நேற்று முன்தினம் புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இதன் விளைவாக வட கடலோர மாவட்டங்களான சென்னை, கடலூர் ,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில், சாலைகள் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மேலும் பலத்த காற்று வீசியதில் பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்து கிடக்கின்றது. இதனை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.

ஆகவே தமிழகத்தில் சேதமானவை விவரங்களை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது. அதன்படி, நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 3 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

nivar storm,damage,calculation,central committee,pondicherry ,நிவர் புயல்,சேதம்,கணக்கீடு,மத்திய குழு,புதுச்சேரி

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைக்கப்பட்ட 3,085 முகாம்களில் 2,27,317 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் முழுமையாக கணக்கெடுக்கும் பணி தொடர்கிறது என்று தமிழக அரசு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நிவர் புயல் சேதங்களை கணக்கிட திங்கள்கிழமை தமிழகம் வருகிறது மத்திய குழு. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புயல் பாதித்த பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளனர்.

Tags :
|