Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பஞ்சாப் முதல்வருக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பை வழங்கிய மத்திய அரசு

பஞ்சாப் முதல்வருக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பை வழங்கிய மத்திய அரசு

By: Nagaraj Fri, 26 May 2023 12:24:29 PM

பஞ்சாப் முதல்வருக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பை வழங்கிய மத்திய அரசு

பஞ்சாப்: இஸட் பிளஸ் பாதுகாப்பு... பஞ்சாப் முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான பகவந்த் சிங் மானுக்கு (49) நாட்டின் மிகஉயரிய பாதுகாப்பான இஸட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருந்து அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளதால் அவருக்கு இந்த பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. பஞ்சாபில் மீண்டும் தலைதூக்கியுள்ள காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிராக மாநில அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அவருக்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.

மத்திய ரிசா்வ் போலீஸ் படையைச் (சிஆா்பிஎஃப்) சோ்ந்த ஆயுதம் ஏந்திய 55 வீரா்கள் சுழற்சி முறையில் அவருக்கு பாதுகாப்பு அளிப்பாா்கள். நாட்டின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் அவருக்கு இந்த பாதுகாப்பு அளிக்கப்படும்.

Tags :
|