Advertisement

ஜிஎஸ்டி பரிசு திட்டம் ...மத்திய அரசு அறிமுகம்

By: vaithegi Sat, 02 Sept 2023 11:38:13 AM

ஜிஎஸ்டி பரிசு திட்டம்   ...மத்திய அரசு அறிமுகம்


ஜிஎஸ்டி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் .. எனவே இதன்படி, ஒவ்வொரு மாதமும் நாடு முழுவதுமிருந்து, ஜிஎஸ்டி இன்வாய்ஸ் கொண்டிருக்கும் 810 பேர் தேர்வு செய்யப்படுவர்.

இதையடுத்து அவர்களில் 10 பேருக்கு தலா ரூ.10 லட்சமும் மீதும் உள்ள 800 பேருக்கு தலா ரூ.10 ஆயிரமும் பரிசாக வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

central government,gst ,மத்திய அரசு,ஜிஎஸ்டி

இந்த திட்டம் முதற்கட்டமாக அசாம், குஜராத், ஹரியாணா, புதுச்சேரி, தாத்ரா நகர் ஹவேலி, டாமன் - டையூ 6 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் இந்தத் திட்டத்துக்கு “என் ரசீது என் உரிமை’’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து நிதி பங்களிப்பு வழங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நடப்பு ஆண்டு பரிசுக்காக ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

Tags :