Advertisement

மத்திய் சுகாதாரத்துறை செயலாளர் காணொலி வாயிலாக ஆலோசனை

By: Nagaraj Mon, 27 Mar 2023 11:07:35 PM

மத்திய் சுகாதாரத்துறை செயலாளர் காணொலி வாயிலாக ஆலோசனை

புதுடெல்லி: மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து சுகாதாரத்துறை செயலாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.

கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு கடந்த 19ம் தேதி 1,000ஐ தாண்டியது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,805 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, குஜராத் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தொற்று அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 300 ஆக உயர்ந்துள்ளது.

advice,corona,health secretaries,increase,union-health-secretary, ,அதிகரிப்பு, ஆலோசனை, கொரோனா, சுகாதார செயலாளர்கள், மத்திய சுகாதார செயலாளர்

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து சுகாதாரத்துறை செயலாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு தெரிவித்துள்ளது.

மீண்டும் கொரோனா வேகமாக பரவுவதற்கான காரணங்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷன் தலைமையில் நடைபெறும் இந்தக் காணொலிக் காட்சியில் . தமிழக அரசு சார்பில், சென்னையைச் சேர்ந்த மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் பி.செந்தில்குமார், பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வ விநாயக் உள்ளிட்ட மருத்துவத் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் மற்றும் அதை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலரிடம் தமிழக அரசு அதிகாரிகள் விளக்கமளிப்பார்கள் என தெரிகிறது.

Tags :
|
|