Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

By: vaithegi Mon, 15 May 2023 4:15:51 PM

அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: மேற்கு திசை காற்று மற்றும் கூடுதல் வெப்ப சலனத்தின் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கும் ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு ... வங்க கடல் பகுதியில் தோன்றிய மோக்காப்புயல் நேற்று தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் பகுதிகளில் கரையை கடந்தது.

இந்த நிலையில், மேற்கு திசை காற்று மற்றும் கூடுதல் வெப்ப சலனத்தின் காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் மழைப்பொழிவு இருந்து வருகிறது. ஆனால், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவுவதாக வானிலை மையம் அறிவித்திருக்கிறது. மேலும், தமிழகத்திலேயே வேலூரில் அதிகபட்ச வெப்பநிலையாக 41.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருக்கிறது.

heavy rain,puducherry,karaikal ,கனமழை,புதுச்சேரி ,காரைக்கால்

இதற்கு அடுத்ததாக, சென்னை, திண்டுக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருவள்ளூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பம் உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் வெப்ப சலனத்தின் காரணமாக இன்று முதல் வருகிற மே 17ஆம் தேதி வரைக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இன்று மற்றும் நாளை தமிழக கடலோரப் பகுதி, குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, இலங்கை கடலோர பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க சல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


Tags :