தமிழகம் மற்றும் புதுவையில் தொடர்ந்து 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
By: vaithegi Mon, 31 Oct 2022 2:04:11 PM
சென்னை: 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு ... தமிழகம் முழுவதும் சமீப நாட்களாகவே அதிக மழை பெய்து கொண்டு வருகிறது. அதிலும், கடந்த அக்டோபர் 29 முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து பருவமழைக்கு முன்னதாக அதிக மழை பொழிவு இருந்த நிலையில், பருவமழை தொடங்கி விட்டால் எதிர்பாராத அளவு மழை பொழிவு இருக்கும் என்று நிபுணர்கள் முன்னதாகவே எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்திற்கு அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1 ஆகிய 2 தினங்களும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு அலர்ட் காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதை தவிர பருவமழை சூடு பிடித்து தமிழகம் மற்றும் புதுவையில் தொடர்ந்து 5 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால் பொதுமக்கள் கவனமாகவும், தேவையான முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.