16 மாவட்டங்களில் இன்று (அக்.09) கனமழை பெய்ய வாய்ப்பு
By: vaithegi Mon, 09 Oct 2023 4:08:16 PM
சென்னை: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (அக்.09) தமிழகத்தில் கோயம்புத்தூர், ஈரோடு, தர்மபுரி, நீலகிரி, கரூர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, கள்ளக்குறிச்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தமிழகத்தின் தென் கடலோர பகுதிகள், மன்னர் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி. மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.