Advertisement

2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

By: Monisha Wed, 14 Oct 2020 3:14:50 PM

2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தேனி, தென்காசி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

heavy rain,weather,clouds,sea rage,fishermen ,கனமழை,வானிலை,மேகமூட்டம்,கடல் சீற்றம்,மீனவர்கள்

தென்தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் கீழக்கரை வரை கடல் சீற்றமாக காணப்படும். அடுத்த 2 நாட்களுக்கு தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|