சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு
By: Monisha Tue, 24 Nov 2020 07:52:44 AM
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிவர் புயலாக மாறி நாளை கரையை கடக்கிறது. இந்நிலையில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்குதல், மரங்கள் முறிந்து மின்தடை போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.