தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
By: Nagaraj Sat, 12 Sept 2020 7:28:03 PM
கனமழைக்கு வாய்ப்பு... அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
தெற்கு ஆந்திரா, வட தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழையும், ஒகு சில பிற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
நீலகிரி, வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய
மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
சென்னையை
பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில
இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் தகவல்
அளித்துள்ளது.