Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் அறிவிப்பு

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் அறிவிப்பு

By: Nagaraj Sat, 26 Sept 2020 10:41:01 AM

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் அறிவிப்பு

கனமழைக்கு வாய்ப்பு... தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

5 districts,heavy rain,chance,chennai,weather center ,5 மாவட்டங்கள், கனமழை, வாய்ப்பு, சென்னை, வானிலை மையம்

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடம்பூர், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நெமூர், செஞ்சி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள கல்லட்டி உள்ளிட்ட இடங்களில் தலா 2 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை ஒட்டியே பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|