Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி... 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி... 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

By: Monisha Mon, 14 Sept 2020 2:43:21 PM

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி... 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆந்திராவில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதன் படி வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், விழுப்புரம் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல் கள்ளக்குறிச்சி, கோவை, நீலகிரி, புதுச்சேரியில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags :