அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
By: Nagaraj Fri, 18 Dec 2020 09:31:25 AM
ஆய்வு மையம் அறிவிப்பு... தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
குமரிக்கடலுக்கு அருகில் இலங்கையை ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மழை நீடிப்பதாக கூறப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் அனேக
இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடுமென வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை
மற்றும் புறநகரில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை
மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில்
நேற்று இரவு முதல் மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
Tags :