Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று முதல் 4 நாட்களுக்கு ஓரிரு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

இன்று முதல் 4 நாட்களுக்கு ஓரிரு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

By: vaithegi Mon, 04 Sept 2023 11:01:56 AM

இன்று முதல் 4 நாட்களுக்கு ஓரிரு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளி யிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், வரும் 9-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதனை அடுத்து இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களிலும், நாளை கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும், வரும் 6-ம் தேதி கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்திலும், வரும் 7-ம் தேதி கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

heavy rain,tamil nadu ,கனமழை ,தமிழகம்

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மேலும் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி,குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.

தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும்குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் யவ்ன அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :