Advertisement

இன்றும் ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

By: vaithegi Wed, 10 May 2023 12:11:18 PM

இன்றும் ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ் அடுக்குகளின் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திப்பதன் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 வாரமாகவே தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது.

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்றும் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

heavy rain,weather center , கனமழை,வானிலை மையம்

அதாவது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.

Tags :