டிசம்பர் 8 , 9 ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
By: vaithegi Tue, 06 Dec 2022 1:46:32 PM
சென்னை: கடலோர மாவட்டங்களில் கனமழை .... அடுத்து வரும் வெள்ளிக்கிழமை தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அதிகபட்சமாக 20 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதால் நாளை நள்ளிரவு முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனை ஆடுர்த்து நாளை நள்ளிரவு முதல் தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும், என்றும் டிசம்பர் 8 , 9 ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் வெள்ளிக்கிழமை மிக மிக பலத்த மழை பெய்யும் என்று கூறியுள்ள வானிலை மையம், அன்றைய தினம் தமிழகத்திற்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கைஒன்றை விடுத்துள்ளது. வெள்ளிக்கிழமை அன்று, அதிகபட்சமாக 20 செ.மீ மழைக்கும் மேல் பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.