Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நிவர் புயல் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நிவர் புயல் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

By: Monisha Mon, 23 Nov 2020 10:20:44 AM

நிவர் புயல் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டிருந்தது. அது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற உள்ளது.

இந்த புயலுக்கு ‘நிவர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து 25-ந் தேதி பிற்பகலில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இன்று நேரத்தில் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

nivar,storm,heavy rain,warning,hurricane ,நிவர்,புயல்,கனமழை,எச்சரிக்கை,சூறாவளி

24-ந் தேதி நாகப்பட்டினம், கடலூர், திருவாரூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய அதிகனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, சிவகங்கை, திருச்சி, ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஏனைய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை மறுதினம் நாகப்பட்டினம், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், திருச்சி, நாமக்கல், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுக்கோட்டை மற்றும் சென்னையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஏனைய வடமாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

nivar,storm,heavy rain,warning,hurricane ,நிவர்,புயல்,கனமழை,எச்சரிக்கை,சூறாவளி

தென்மேற்கு மற்றும் தமிழக கடலோர பகுதியில் இன்று மணிக்கு 65 கிலோ மீட்டர் வரையிலான வேகத்திலும், தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 110 கிலோமீட்டர் வரையிலான வேகத்திலும் காற்று வீசக்கூடும். அதேபோல் தென்மேற்கு மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் 24, 25-ந் தேதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 75 கிலோ மீட்டர் வரையிலான வேகத்திலும் வீசும். இதன் காரணமாக மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் எண்ணூர், கடலூர், நாகை, பாம்பன், புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி துறைமுகத்திலும் முன்னெச்சரிக்கையாக 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் ராமநாதபுரம், நாகை, சீர்காழி, புதுச்சேரி மீனவர்கள் தங்களது படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

Tags :
|
|