Advertisement

இன்று பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

By: vaithegi Mon, 23 Oct 2023 2:59:17 PM

இன்று பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு


சென்னை:வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே அதன்படி, இன்று பல மாவட்டங்களில் காலை10 மணி வரைக்கும் அதி கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான கனமழையும், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

heavy rain,weather center ,கனமழை,வானிலை மையம்

மேலும் சென்னையை பொறுத்தவரையிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு தாம்பரம், ஆலத்தூர், குன்றத்தூர், மதுரவாயல், சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளிலும், அயனாவரம், எழும்பூர், மயிலாப்பூர், பெரம்பூர், மாதவரம் ஆகிய பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், கடலோர பகுதிகளில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படியும், மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்வதை தவிர்த்துக் கொள்ளும் படியும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Tags :