புதுவை, காரைக்கால் பகுதிகளில் வருகிற 17,18 ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
By: vaithegi Sat, 16 July 2022 4:40:06 PM
தமிழகம்: தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் ஜூன் 17 மற்றும் ஜூன் 18 ஆகிய தேதிகளில் கனமழை வெளுத்து வாங்கும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மேலும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று மத்திய மற்றும் அதை ஒட்டிய தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகா கடலோர பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிகம் கனமழை பெய்யும் பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகமும் அதற்கான ஏற்பாடுகளை செய்து இருப்பதாக தெரிவித்துள்ளது.