தமிழகத்தில் வரும் 2, 3ம் தேதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்பு
By: Nagaraj Sun, 29 Nov 2020 12:35:33 PM
கனமழை பெய்யும் வாய்ப்பு... வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழகத்தின் சில இடங்களில் டிசம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்திற்கு டிசம்பர் முதல் தேதியில் இருந்து தமிழகத்தின் சில பகுதிகளுக்கு பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிரதமரின் வருகையை ஒட்டி பாதுகாப்புக்காக கங்கையில் படகு சவாரிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ராஜா தலாப் பகுதியில் இருந்து பிரயாக்ராஜ் வரையிலான தேசிய நெடுஞ்சாலையை ஆறுவழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்ட திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
வாரணாசியில் காசி விஸ்வநாதர் ஆலயம், சாரநாத் தொல்பொருள் ஆய்வு மையம் உள்ளிட்ட இடங்களுக்கும் பிரதமர் மோடி செல்ல திட்டமிட்டுள்ளார்.