இந்த மாவட்டங்களில் கனமழை பொழிய வாய்ப்பு
By: vaithegi Fri, 06 Oct 2023 2:48:54 PM
சென்னை: 15 மாவட்டங்களில் கனமழை ... தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து உள்ளது. இதையடுத்து அதிகபட்சமாக திருவண்ணாமலையில் 10 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. மேலும் ஈரோட்டில் அதிகபட்ச வெப்பநிலை 38.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
எனவே மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வருகிற அக்டோபர் 6 மற்றும் 7 ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேபோன்று வருகிற அக்டோபர் 8 மற்றும் 9ஆம் தேதி கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வானம் அடுத்து ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளின் குமரிக்கடல், தெற்கு பகுதிகளில் சூறாவளி காற்று மணி 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இன்று கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.