- வீடு›
- செய்திகள்›
- உத்தரகாண்ட் மாநிலத்தில் வருகிற ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு ,சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
உத்தரகாண்ட் மாநிலத்தில் வருகிற ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு ,சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
By: vaithegi Sat, 30 July 2022 4:56:35 PM
உத்தரகாண்ட் : நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கணிசமாக கனமழை பெய்து கொண்டு வருகிறது. இந்த மழையானது இன்னும் சில நாட்களுக்கு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று முதல் வருகிற ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் டேராடூன், நைனிடால், தெஹ்ரி, பவுரி, சம்பவத், சாமோலி, பித்தோராகர் மற்றும் பாகேஷ்வர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும் கனமழை காரணமாக பத்ரிநாத் NH-7 இன் ஒரு பகுதி, லம்பகாட்டில் அமைந்துள்ள கச்டா வாய்க்காலில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் வெள்ளத்தால் நெடுஞ்சாலையின் இருபுறமும் பக்தர்கள் சிக்கி தவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அடுத்த 4-5 நாட்களுக்கு மத்திய, மேற்கு, கிழக்கு மற்றும் தென்னிந்தியாவில் இடியுடன் கூடிய மழை மற்றும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்வும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.