- வீடு›
- செய்திகள்›
- இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு
இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு
By: vaithegi Mon, 24 Apr 2023 4:09:35 PM
சென்னை: தமிழகத்தில் மேல் மற்றும் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் நிலவும் சுழற்சி காரணமாக ஒரு சில இடங்களில் மழைப்பொழிவு இருந்து கொண்டு வருகிறது. ஆனாலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவி வருவதாக வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் திருச்சியில் தான் அதிகளவிலான வெப்பம் பதிவாகியிருக்கிறது. அதாவது அதிகபட்ச வெப்பநிலையாக திருச்சியில் 39.9 டிகிரி செல்சியஸ் வரைக்கும் வெயில் பதிவாகியிருக்கிறது.
இதனை அடுத்து தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருவதால் கோயம்புத்தூர், சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பம் குறைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதற்கு அடுத்ததாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசான மழைப்பொழிவு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைப்பொழிவு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் மீனவர்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.