- வீடு›
- செய்திகள்›
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 2 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 2 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு
By: vaithegi Mon, 22 May 2023 12:13:34 PM
சென்னை: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து உள் தமிழக மாவட்டங்களில் இன்று சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி முதல் 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும் எனவும் அறிவித்துள்ளது.
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 2 நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 83 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.
மே 21-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 7 செ.மீ., தருமபுரி மாவட்டம் பென்னாகரம், திருவள்ளூர் மாவட்டம் திரூரில் 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் தெரிவித்தார்.