Advertisement

அடுத்த 4 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Sat, 31 Dec 2022 7:06:55 PM

அடுத்த 4 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் இருந்து கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த மழை பொழிவால் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிபேட்டை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் வங்கக்கடலில் உருவான மாண்டாஸ் புயலால் தமிழகம் முழுவதும் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது அதையடுத்து .தற்போது வடகிழக்கு பருவமழை ஓய்ந்துள்ளது. எனினும் கிழக்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 4 நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளது.

rainy,chennai ,மழை,சென்னை

மேலும் இன்று தென்‌ தமிழக மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழையும் அதிகாலை வேளையில்‌ லேசான பனி மூட்டமும் காணப்படும்‌.அதே போல 2023 ஜன. 1, 2, 3 மற்றும் 4ம் தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுவை பகுதிகளில்‌ வறண்ட வானிலை நிலவக்கூடும்‌.

இதனையடுத்து அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 31 – 32 டிகிரி செல்‌௪ியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌ எனவும் தெரிவித்துள்ளது.

Tags :
|