Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக லேசான மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Sun, 18 June 2023 10:20:28 AM

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

மேலும் அத்துடன் இன்று வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழைபெய்யக்கூடும் எனவும் கூறியிருந்தது.

light rain,chennai,suburbs ,லேசான மழை,சென்னை ,புறநகர் பகுதிகள்

அந்தவகையில், இரவு முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன், ஆங்காங்கே லேசான மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

இதையடுத்து அதன்படி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, அயனாவரம், பெரம்பூர், புரசைவாக்கம், திருவள்ளூர், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, ஊத்துக்கோட்டை,அம்பத்தூர், மாதவரம் , திருத்தணி, ஆந்தூர், எழும்பூர், கிண்டி, குன்றத்தூர், மதுரவாயல், மாம்பலம், மயிலாப்பூர், பூவிருந்தவல்லி பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.

Tags :