Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

By: vaithegi Mon, 29 May 2023 09:38:44 AM

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

அதிலும் குறிப்பாக நாளை மறுநாள் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளது.

இதனை அடுத்து வருகிற 1ஆம் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

rainy,nilgiri,coimbatore,erode,krishnagiri,dharmapuri ,மழை ,நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி ,தர்மபுரி

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதன்படி கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|