Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடலூர், மயிலாடுதுறை உள்பட 4 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

கடலூர், மயிலாடுதுறை உள்பட 4 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Mon, 28 Nov 2022 09:42:46 AM

கடலூர், மயிலாடுதுறை  உள்பட 4 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது . கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் அடுத்த 5 தினங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்திருந்தது.

இதனை அடுத்து சென்னையை பொறுத்தவரை அடுத்த இரண்டு தினங்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவித்திருந்தது வானிலை ஆய்வு மையம்.

puducherry,tamil nadu,rain ,தமிழ்நாடு ,புதுச்சேரி ,மழை

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிருக்கிறது.

மேலும் கடலூர், மயிலாடுதுறை, ஈரோடு, பெரம்பலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

Tags :