இன்று 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு
By: vaithegi Mon, 06 Nov 2023 11:57:14 AM
சென்னை: பருவமழை தொடங்கி உள்ள நிலையில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து கொண்டு வருகிறது. வடதமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து இன்று காலை முதல் சென்னையில் கிண்டி, தேனாம்பேட்டை, தி.நகர், வடபழனி, அசோக் நகர், சைதாப்பேட்டை, நந்தனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும்
மேலும் திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.