அடுத்த 4 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு
By: vaithegi Thu, 15 Sept 2022 4:01:58 PM
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல இடங்களில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. மேலும் அத்துடன் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் மற்றும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
இதையடுத்து அடுத்த 4 நாட்களுக்கும் தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிக்கையில் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே அதன்படி மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 15.09.2022 மற்றும் 16.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
17.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.18.09.2022 மற்றும் 19.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.