Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடுத்த 3 மணி நேரத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி உட்பட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

அடுத்த 3 மணி நேரத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி உட்பட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

By: vaithegi Sat, 25 Mar 2023 10:01:11 AM

அடுத்த 3 மணி நேரத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி உட்பட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே கடந்த பிப்ரவரில் மாதங்களில் பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. இந்த நிலையில் கோடை நெருங்கும் இந்த காலத்தில் வானிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் அவ்வப்போது சில மாவட்டங்களில் வெளியிலும், மழையும் மாறி மாறி இருந்து கொண்டு வருகிறது.

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் நிகழ்வு நடைபெறுவதால் இந்த வானிலை மாற்றம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

rainy,dharmapuri,krishnagiri ,மழை ,தருமபுரி, கிருஷ்ணகிரி

எனவே இதன் காரணமாகவே தமிழ்நாட்டில் பல இடங்களில் கனமழை பெய்து கொண்டு வருகிறது. தொடர்ந்து அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அதன்படி, தருமபுரி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
|